கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.கடந்த மாதம் முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதத்திலும் இன்னும் பல தளர்வுகள் அறிவிக்க மக்கள் எதிர்பார்த்து இருந்த வேளையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட இருப்பதாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில்,இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,“மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட இருப்பதாக கூறியுள்ள தகவல்கள் பொய்யானது அதனை நம்ப வேண்டாமென்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து,நேற்று திருவள்ளூர் மாவட்டத்தை கொரோனா ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்,“கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது,அரசு கூறும் வழிமுறைகளை பொதுமக்கள் சரிவர கடை பிடிக்க வில்லை.கடை பிடித்தால் இன்னும் கொரோனா வைரஸ் பரவல் கட்டிற்குள் வரும்.
சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பு குறைந்துவருகிறது.ஆனால்,
சேலம்,ஈரோடு,திருப்பூர்,உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனால் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.“நிச்சயம் இருக்காது, அது பொய்யான தகவல்.” என்று தெரிவித்தார்.