நாளை முதல் “அதிமுகாவை நிராகரிப்போம்” என்ற பிரச்சாரத்தை 1600 கட்சி முன்னணியினர் 10 நாட்கள் ஈடுபட உள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுகாவின் 10 ஆண்டுக்கால மிக மோசமான ஆட்சியினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.விவசாயிகளின் துயரம்,அதிகரித்து வரும் கடன் சுமை,மோசமடைந்துள்ள சட்டம்-ஒழுங்கு,கேள்விக்குறியாகும் மக்களின் பாதுகாப்பு,என நீல்கிறது அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள்.மேலும்,மத்திய அரசால் மாநில அரசின் அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வருவதால்,தமிழக அரசின் நிர்வாக முடங்கியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் பெயரில்,”அதிமுகாவை நிராகரிப்போம்” என்ற பிரசாரத்தை 1,600 கட்சி முன்னணியினர் மேற்கொள்கின்றனர்.இதன் படி 23-ந் தேதி (நாளை) முதல் அடுத்த 10 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை கூட்டுவார்கள்.
இந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு,தமிழக அரசின் தோல்விகளை விளக்கப்படும்.பின்னர் அதிமுகவுக்கு எதிரான மக்கள் தீர்மானத்தில் கையொப்பம் பெறப்படும்.
கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்,நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் “மிஷன் 200” என்பது திமுக கூட்டணியின் இலக்கு.வெற்றி வாய்ப்பு திமுகாவிற்கு சாதகமாகவே இருக்கிறது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் திமுகாவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.