தம் மக்கள்,தம்மைவிடக் கல்வி அறிவுடையவராக…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது; இதில் ஆதி பகவன் – என்பது கடவுளைக் குறிக்கிறது). திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
7.) மக்கட்பேறு:
68.) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிா்க் கெல்லாம் இனிது
பொருள்:
தம் மக்கள்,தம்மைவிடக் கல்வி அறிவுடையவராக இருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மேலும் படிக்க: